தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனின் முகநூல் பதிவு,
“தமிழ் முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் (2015-2019) அங்கம் வகித்த நான்கே வருடம் தான் மலையக பொற்காலம்.
காணி, வீடு, பிரதேச சபை, பிரதேச செயலகம், வீதி, கோவில், சனசமூக நிலையம், அடங்கிய மலையக தமிழ் கிராமம், என்பவைகளை அரசாங்க கொள்கை சட்டமாக முன்னெடுத்த காலம்.
மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால், பெருந்தோட்ட துறையில் முறை மாற்றம் (System Change) செய்து, “தொழிலாளி”யை, “பங்காளி”யாக மாற்றும் பணியை ஆரம்பித்திருப்போம்.
இதை புரிந்து கொள்ள முடிந்தவர்கள், புரிந்து கொள்வார்கள்.










