ஈரான் அதிஉச்ச தலைவர் பலி: மத்திய கிழக்கில் பதற்றம்!

ஈரானின் அதிஉச்ச தலைவரான அயோதுல்லா அலி கமேனி , அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளார்.
அவர் உயிரிழந்துள்ளதை ஈரான் அரச ஊடகமும் உறுதிப்படுத்தியுள்ளது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள கமேனியின் அதிகாரபூர்வ இல்லம் மற்றும் அலுவலகங்களைக் குறிவைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின.

இந்தத் தாக்குதலில் கமேனியின் இருப்பிடம் முற்றிலும் தரைமட்டமானதாகவும், நவீனத் தொழில்நுட்ப கண்காணிப்பு மூலம் அவர் இருந்த இடத்தை உறுதி செய்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

“ஈரானிய மக்கள் தங்கள் நாட்டைத் திரும்பப் பெறுவதற்கான மிகப்பெரிய வாய்ப்பு இது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கமேனியின் குடும்ப உறுப்பினர்களும் உயிரிழந்துள்ளனர்.

 

Related Articles

Latest Articles