“ஈரான் கப்பல்கள் விவகாரத்தில் இலங்கை சரியான முடிவையே எடுத்துள்ளது. சர்வதேச சட்டத்துக்கமையவே செயல்பட்டுள்ளது.” என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
“ இலங்கைக்கு அப்பால் உள்ள சர்வதேச கடற்பரப்பில் தாக்குதலுக்கு இலக்கான ஈரான் கப்பலில் இருந்தவர்களை இலங்கை கடற் படையினர் மீட்டனர்.
இந்த நடவடிக்கை சர்வசதேச சமவாயங்களுக்கு உட்பட்டது. அப்பகுதியில் அமெரிக்க கப்பல் ஒன்று இருந்திருந்தால்கூட ஈரான் படையினரை நிச்சயம் காப்பாற்றி இருக்க வேண்டும். அதுதான் சர்வதேச சட்டம்.
எதிரணி சரணடைய வந்தால்கூட அவரை சுட்டுக்கொல்வதற்கு சர்வதேச சட்டத்தில் இடமில்லை.
எனவே, ஈரான் கப்பல்கள் விவகாரத்தில் இலங்கை எடுத்த முடிவு சரியானது. சர்வதேச சட்டத்துக்கு உட்பட்டது. அவ்வாறு செய்திருக்காவிட்டால்தால் கடும் விமர்சனங்கள் எழுந்திருக்கும்.” – என்றார் பொன்சேகா.










