பாகிஸ்தான் அணி பங்களாதேஷ் அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் வென்று தொடரில் 1-0 என முன்னிலை வகித்தது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி டாக்காவில் நேற்று நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 47.3 ஓவரில் 274 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பங்களாதேஷ் அணி களமிறங்கியது. மழை காரணமாக 32 ஓவரில் 243 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
பாகிஸ்தான் அணியினரின் துல்லிய பந்துவீச்சில் சிக்கி விரைவில் விக்கெட்களை இழந்தது.இதனால் வங்கதேச அணி 23.3 ஓவரில் 114 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 41 ரன்னும், தவுஹித் ஹிருடோய் 28 ரன்னும் எடுத்தனர்.
பாகிஸ்தான் சார்பில் ஹாரிஸ் ராப், மாஸ் சதாகத் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், ஷாஹீன் அப்ரிடி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.இதன்மூலம் பாகிஸ்தான் அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் ஒருநாள் தொடரில் 1-1 என சமனில் உள்ளது.
3ஆவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகின்றது.










