மன்னார் மறைமாவட்ட ஆயரை சந்தித்த சிறீதரன் எம்.பி.

மன்னார் மறைமாவட்ட ஆயரை சந்தித்த சிறீதரன் எம்.பி.

– தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் குறித்து கலந்துரையாடல்

மன்னார் மாவட்டத்துக்கு விஜயம் செய்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மன்னார் மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்துக்குரிய பேரருட் கலாநிதி ஞானப்பிரகாசம் அந்தோனிப்பிள்ளை ஆண்டகையை இன்று (14) காலை சந்தித்துக் கலந்துரையாடினார்.

மன்னார் ஆயர் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் சமகால சவால்கள் தொடர்பாக ஆயரின் கவனத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கொண்டு சென்றார்.

இந்தச் சந்திப்பின்போது தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனும் உடனிருந்தார்.

சமகால அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில் தமிழ் மக்களின் நலன் சார்ந்த அடுத்தகட்ட நகர்வுகள் குறித்தும் இதன்போது ஆலோசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles