ஈரானின் நடன்ஸ் அணுசக்தி Natanz nuclear நிலையம்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் பதிலடி நடவடிக்கையை ஈரான் தீவிரப்படுத்தும் என போர் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேற்படி அணுசக்தி நிலையம் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து இன்று (21) தாக்குதல் நடத்தியுள்ளன என்பதை ஈரான் அணுசக்தி அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
எனினும், கதிரியக்கக் கசிவு குறித்து எந்த தகவலும் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் சவுதி அரேபியா மற்றும் இஸ்ரேல் மீது ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களின் புதிய அலையை ஈரான் தொடங்கியுள்ளது.
இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் விமானங்களை ஆளில்லா விமானங்கள் மூலம் குறிவைத்ததாக ஈரானிய ராணுவம் தெரிவித்துள்ளது.
போரால் ஈரானில் இதுவரை ஆயிரத்து 400 இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என ஈரான் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
