“ஈரானுடனான புதிய உடன்படிக்கை மூலம் போரின் நோக்கங்களை அடைவதற்கும், பிராந்தியத்தில் தமது முக்கிய நலன்களைப் பாதுகாக்கவும் வாய்ப்புள்ளதாக டிரம்ப் கருதுகின்றார்.”
இவ்வாறு இஸ்ரேல் பிரதமர் தெரிவித்தார்.
ஈரான்மீதான தாக்குதல்கள் ஐந்து நாட்களுக்கு நிறுத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று அறிவித்தார்.
தமது நாட்டுடன் ஈரான் பேச்சு நடத்திவருகின்றது எனவும் அவர் கூறினார்.
எனினும், ஈரான் மற்றும் லெபனான் மீது இஸ்ரேலிய ராணுவம் தொடர்ந்து கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
குறிப்பாக ஈரானின் அணுசக்தித் திட்டத்தை சிதைத்து வருவதாக இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அமெரிக்காவுடன் தாம் பேச்சு நடத்தவில்லை என ஈரான் தெரிவித்துள்ளது.
எண்ணெய் சந்தையைக் கையாளவே இத்தகைய போலி செய்திகள் பரப்பப்படுவதாக ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது.
