நேட்டோ (NATO) அமைப்பிலிருந்து வெளியேறுவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீவிரமாக ஆலோசித்துவருகின்றார் என தெரியவருகின்றது.
ஈரான்மீதான ராணுவ நடவடிக்கைக்கு நேட்டோ உறுப்பு நாடுகள் போதிய ஆதரவை வழங்கவில்லை என்று குற்றம் சாட்டும் ட்ரம்ப், அந்த அமைப்பை ஒரு வலிமையற்ற கட்டமைப்பு என்று விமர்சித்துவருகின்றார்.
குறிப்பாக, ஈரான் மற்றும் உக்ரைன் விவகாரங்களில் அமெரிக்காவிற்குத் தகுந்த ஒத்துழைப்பு வழங்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்கா மற்ற நாடுகளுக்குத் தானாகவே முன்வந்து உதவிய போதிலும், நேட்டோ கூட்டணி நாடுகள் அதற்குப் பிரதிபலனாகச் செயல்படவில்லை என்பது அவரது முக்கிய வாதமாகும்.
இந்த விரிசல் காரணமாக, சர்வதேச பாதுகாப்பு ஒப்பந்தங்களில் இருந்து அமெரிக்கா விலகக்கூடும் என்ற அச்சுறுத்தலை டிரம்ப் விடுத்துள்ளார்.
