திம்புள்ள, பத்தன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேபீல்ட் தோட்ட தொழிலாளர்கள் இன்று (21) பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தோட்ட முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர் ஆகியோரை உடனடியாக இடமாற்றுமாறு வலியுறுத்தியே இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
தோட்டத் தொழிலாளர்களை பழிவாங்கும் நோக்கில் இவர்கள் செயல்படுகின்றனர் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
தோட்ட காவலாளியொருவர் அண்மையில் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்றுள்ளார்.
இது தொடர்பில் இன்று பெரட்டுக்களத்தில் வைத்து தொழிலாளர்கள் நீதி கோரியுள்ளனர்.
இதன்போது தொழிலாளர்களுக்கும், தோட்ட முகாமைத்துவத்தினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அவ்வேளையில் தோட்ட முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சாணத்தை கரைத்து இவர்கள்மீது சிலர் ஊற்றியுள்ளனர் எனவும் கூறப்படுகின்றது.
இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றன.
(மேலதிக தகவல்கள் விரைவில்….)
(இச்சம்பவம் தொடர்பில் நிர்வாக தரப்பில் இருந்தும் இன்னும் விளக்கமளிக்கப்படவில்லை.)
செ.தி.பெருமாள்










