ஸ்டாலினை சந்தித்தார் விஜய்: ஆரத் தழுவி வரவேற்றார் உதயநிதி!

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினை, தமிழக முதல்வர் ஜோசப் விஜய், இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.

ஸ்டாலினை சந்திக்க ஆழ்வார்பேட்டை இல்லத்துக்கு சென்ற ஜோசப் விஜய்யை, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாசலுக்கே வந்து ஆரத் தழுவி வரவேற்றார்.

முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு ஜோசப் விஜய் முதலில் பொன்னாடை போர்த்தி, வாழ்த்து பெற்றார்.

பதிலுக்கு ஸ்டாலினும் ஜோசப் விஜய்க்கு பொன்னாடை போர்த்தினார். உதயநிதி ஸ்டாலின் ஜோசப் விஜய்க்கு புத்தகம் வழங்கினார்.

இதனையடுத்து முதல்வர் ஜோசப் விஜய், முன்னாள் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சிறிது நேரம் கலந்துரையாடினர்.

தமிழகத்தில் கௌரவமானதொரு அரசியல் கலாசாரத்தை உருவாக்கும் வகையிலேயே விஜய் இந்த சந்திப்பை நடத்தியுள்ளார் எனக் கூறப்படுகின்றது.

வைகோ உள்ளிட்ட கட்சி தலைவர்களையும் நேரில் சந்தித்து விஜய் வாழ்த்து பெற்றுள்ளார்.

Related Articles

Latest Articles