“மக்களின் நிலைப்பாடு என்னவென்பதை அறிவதற்காக மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வலியுறுத்தியுள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் அக்கட்சியின் உறுப்பினரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,
“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் நாட்டை ஆள்வதற்கு முடியவில்லை. எனவே, மக்களின் நிலைப்பாடு என்னவென்பதை நடத்துவதற்குரிய ஜனநாயக பரீட்சை நடத்தப்பட வேண்டும்.
மாகாணசபைத் தேர்தல் நீண்டகாலமாக நடத்தப்படாமல் உள்ளது. எனவே, அத்தேர்தலை நடத்த வேண்டும்.
அவ்வாறு அல்லாவிட்டால் இன்னும் சில மாதங்களுக்கு பிறகு நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியும்.
ஜனநாயக வழியிலேயே நாம் மக்கள் கருத்தை அறிவதற்கு விரும்புகின்றோம். ஆகவே, அரசாங்கம் ஜனநாயகத்தை மதித்து செயல்பட வேண்டும்.” – என்றார்.
