சிறார் பாதுகாப்பு குறித்து பதுளையில் விழிப்புணர்வு!

 

பதுளை மாவட்டத்தில் ஆபத்துக்கு உள்ளாகும் சிறுவர்களை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டும் திட்டம் நேற்று (25) பதுளை மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

ஊவா மாகாண சிறுவர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், குழந்தைகள் மீதான துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும்.

“நீங்கள் விழிப்புடன் உள்ளீர்களா?” என்ற கருப்பொருளில் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஸ்டிக்கர்களில், வட்சப் அவசர அழைப்பு இலக்கமான 071 333 1919 மற்றும் ஊவா மாகாண சிறுவர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு திணைக்களத்தின் இணையதள தகவல் பக்கத்துக்குச் செல்லும் QR குறியீடும் இடம்பெற்றுள்ளன.

மாகாண சிறுவர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு திணைக்களத்தின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், பதுளை பொலிஸ் அத்தியட்சகர் திரிக்க்ஷன எதிரிசூரிய, மாகாண போக்குவரத்து சேவை அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பசறை நிருபர்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles