மட்டக்களப்பு நகரிலுள்ள ஹோட்டல் அறையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறார்கள் உயிரிழந்துள்ளனர்.
பதுளை, பசறை – பெல்கஹாதென்ன பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமியும், 3 வயது சிறுவன் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
தனது மனைவியின் மருத்து தேவைக்காக பிள்ளைகளோடு மட்டக்களப்புக்கு வந்ததாக உயிரிழந்த பிள்ளைகளின் தந்தை வாக்குமூலம் அளித்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.
மனைவியை வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர், தந்தையும், பிள்ளைகளும் மட்டக்களப்பு நகரில் உள்ள ஹோட்டலொன்றில் அறையொன்றை பெற்று தங்கியுள்ளனர்.
இந்நிலையில் பிள்ளைகளை அறையில் விட்டுவிட்டு, தந்தை ஹோட்டலின் கீழ் தளத்துக்கு சென்றுள்ளார் எனவும், இதன்போது சிறுவர்களால் அறையில் இருந்த லைட்டர் இயக்கப்பட்டிருக்கலாம் எனவும், இதனால் தீ பற்றி இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தீயினால் ஏற்பட்ட அதிக புகையை சுவாசித்ததால் சிறுவர்கள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.










