‘காங்கிரசுக்கு நிலையான வாக்கு வங்கியுள்ளது’

மலையகத்தில் நிலையான வாக்கு வங்கியுள்ள ஒரேயொரு கட்சியென்றால் அது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்தான் என்று காங்கிரஸின் ஊடகப்பேச்சாளரும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான கணபதி கணகராஜ் தெரிவித்தார்.

” இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பது மக்களுக்கான செயற்படும் மக்கள் இயக்கமாகும். அதிலுள்ள உறுப்பினர்கள் குடும்ப உறுப்பினர்கள்போலவே கருதப்படுவார்கள். எனவே, காங்கிரஸ் என்பது குடும்ப கட்சி என்பது ஒருவிதத்தில் உண்மைதான். ஏனெனில் மலையக சமுகம் என்ற குடும்பத்துக்கான கட்சி அது.

பதவிகளுக்கு ஜனநாயக அடிப்படையிலேயே தேர்வுகள் இடம்பெறுகின்றன. கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்களின் கோரிக்கையின் பிரகாரமே இ.தொ.காவின் பொதுச்செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.” – என்றும் அவர் கூறினார்.

Related Articles

Latest Articles