பிபா விதியை மீறி கொடிகள்: ஈரான் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது மைதானத்தில் எதிர்ப்புக் குரல்!

லாஸ் ஏஞ்சல்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஈரான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்குரிய அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது என அறிவிப்புகள் வெளியான சூழலிலேயே இப்போட்டியும் நடைபெற்றது.

திங்கட்கிழமை நடைபெற்ற இப்போட்டியின் போது, மைதானத்திற்கு வெளியே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததோடு, போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.

ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே நியூசிலாந்து அணியின் கேப்டன் கிறிஸ் வுட் கொடுத்த பந்தைப் பயன்படுத்தி, எலிஜா ஜஸ்ட் பெனால்டி பகுதிக்குள் இருந்து உதைத்து ஒரு கோல் புகுத்தி நியூசிலாந்திற்கு முன்னிலை தேடித்தந்தார்.

இதன்போது, ஈரான் அரசாங்கத்தை விமர்சிக்கும் சில ரசிகர்கள் நியூசிலாந்து ஆதரவாளர்களுடன் இணைந்து கொண்டாடினர்.

இஸ்லாமிய புரட்சிக்கு முந்தைய ஈரானின் (Lion and Sun) கொடியை இந்த ஆட்சி எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் பலர் ஏந்தியிருந்தனர்.

இது பிபா (FIFA) அமைப்பின் விதிகளுக்கு முரணானதாகும். அத்துடன், போட்டி தொடங்குவதற்கு முன்னர் ஈரானின் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது சிலர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கூச்சலிட்டனர்.

இருப்பினும், மைதானத்தில் திரண்டிருந்த 70,000-க்கும் மேற்பட்ட ரசிகர்களில் பெரும்பாலோர் “ஈரான்! ஈரான்!” என முழக்கமிட்டு ஈரான் அணிக்கு தங்களது பலத்த ஆதரவை வெளிப்படுத்தினர்.

ஆட்டத்தின் 30-ஆவது நிமிடத்திற்குப் பிறகு, ரமின் ரெசேயன் ஈரானுக்கான முதல் கோலை அடித்து ஆட்டத்தைச் சமன் செய்தபோது மைதானமே அதிர்ந்தது.

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியில் ஈரானின் உள்நாட்டு லீக் போட்டிகள் இடைநிறுத்தப்பட்டதால், கடந்த பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு எந்தவொரு கிளப் போட்டிகளிலும் விளையாடாத பல ஈரான் வீரர்களில் ரெசேயனும் ஒருவர்.

எதிரணியால் தடுக்கப்பட்ட பந்தை மிக விரைவாகக் கையாண்ட அவர், நியூசிலாந்து கோல்கீப்பரைக் கடந்து அதனை கோலாக்கினார்.

இரண்டாவது பாதியின் தொடக்கத்தில் கிறிஸ் வுட் மற்றும் எலிஜா ஜஸ்ட் கூட்டணி மீண்டும் ஒருமுறை சோபித்தது.

நியூசிலாந்து கேப்டன் கிறிஸ் வுட் கொடுத்த துல்லியமான பாஸைப் பெற்ற 26 வயதான முன்கள வீரர் எலிஜா ஜஸ்ட், பந்தை பலமாக உதைத்து மீண்டும் நியூசிலாந்தை முன்னிலைக்குக் கொண்டு சென்றார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் 10 நிமிடங்களுக்குப் பிறகு ஈரான் ஒரு அதிபாரிய கோலை அடித்தது. முகமது மொஹெப்பி ரமின் ரெசேயன் கொடுத்த துல்லியமான கிராஸ் பந்தை தலையால் முட்டி கோல் கம்பத்திற்குள் செலுத்தி ஆட்டத்தை 2-2 என மீண்டும் சமநிலைக்குக் கொண்டு வந்தார்.

திங்கட்கிழமை முன்னதாக நடைபெற்ற போட்டியில் பெல்ஜியம் மற்றும் எகிப்து அணிகள் 1-1 என சமநிலை கண்டதைத் தொடர்ந்து, இந்த ஆட்டமும் சமநிலையானதால் தற்போது ‘குரூப் ஜி’ (Group G) பிரிவில் உள்ள அனைத்து அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பெற்றுள்ளன.

உலகக் கோப்பைத் தொடரில் தனது 3-ஆவது உலகக் கோப்பை ஆட்டத்தை விளையாடும் நியூசிலாந்து அணி, இதுவரை விளையாடிய 7 உலகக் கோப்பை போட்டிகளிலும் ஒரு வெற்றியைக்கூடப் பெறாமல் நீடிக்கிறது.

அதேவேளை, ஈரான் அணி முதல் முறையாக அடுத்த சுற்றுக்கு (Knockout round) தகுதிபெறக் காத்திருக்கிறது.

போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, சுமார் 300 முதல் 500 போராட்டக்காரர்கள் மைதானத்திற்கு வெளியே கூடி, அரசாங்கத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பலகைகளையும் கொடிகளையும் ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சில ஈரானிய அமெரிக்கர்கள் இப்போட்டியில் கலந்துகொள்வது ஈரான் அரசாங்கத்தை ஆதரிப்பதற்கு சமம் என்று கூறினர். ஆனால் மற்றவர்களோ, அரசியலைத் தள்ளிவைத்துவிட்டு வீரர்களுக்கு ஆதரவளிக்க விரும்புவதாகத் தெரிவித்தனர்.

ஈரான் அணி தனது அடுத்த போட்டியில் பெல்ஜியத்தை எதிர்கொள்ள மீண்டும் லாஸ் ஏஞ்சலஸ் வரவுள்ளது.

அதேவேளை நியூசிலாந்து அணி வான்கூவர் (Vancouver) நகரில் எகிப்தை எதிர்கொள்ளவுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles