கொட்டகலையில் நேற்று முன்தினம் (17) நடைபெற்ற திருமண வைபவமொன்றின்போது கைகலப்பில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 11 பேரும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபர்கள், ஹட்டன் நீதவான் முன்னிலையில் நேற்று முற்படுத்தப்பட்டனர்.
இதன்போது எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சட்டத்திற்கு முரணான வகையில் ஒன்றுகூடியமை, மதுபோதையில் பொதுவெளியில் அநாகரிகமாக நடந்துகொண்டமை, அமைதியின்மையை ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின்கீழ் இவர்களுக்கு எதிராக முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
திருமண மண்டபத்தில் கைகலப்பில் ஈடுபட்டிருந்த இரு தரப்பினரை கட்டுப்படுத்தவந்த திம்புள்ள, பத்தனை பொலிஸார்மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தி இருந்தனர்.
மேற்படி சம்பவத்தால் கொட்டகலை நகரில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது.
