தலவாக்கலை நகர் மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்களில் 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
நாளை (16) காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலவாக்கலை பிராந்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஷதாழ்நிலப் பகுதிகளில் 12 மணித்தியால நீர்வெட்டும் மேட்டுநில பகுதிகளில் சுமார் 24 மணித்தியால நீர்வெட்டும் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதேசத்திற்கான நீர் விநியோகக் குழாய்களில் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக தற்காலிக நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.