பசறை பகுதியில் மேலும் இருவருக்கு கொரோனா

பசறை பகுதியில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 13ஆம் திகதி 78 நபர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் நேற்றைய தினம் வெளிவந்தன. இதன்படி அம்மணிவத்தை பகுதியை சேர்ந்த ஆணொருவரும் கோணக்கலை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

இவர்கள் இருவரையும் இன்றைய தினம் (16) தனிமைப்படுத்தப்படுத்தல் முகாமுக்கு அழைத்து செல்வதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் இதுவரையில் பசறை பகுதியில் மொத்தமாக 29 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இதில் 26 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் பசறை பொது சுகாதார பரிசோதகர் V. ராஜதுரை தெரிவித்தார்.

செய்தி – ராமு தனராஜா பசறை.

Related Articles

Latest Articles