நாட்டில் கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் டெங்கு நோயால் 3 ஆயிரத்து 422 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2026 ஜனவரி முதல் ஜுலை 03 வரையான காலப்பகுதிக்குள் நாடளாவிய ரீதியில் 58 ஆயிரத்து 810 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.
மேல் மாகாணத்திலேயே 30 ஆயிரத்து 876 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த பாதிப்பில் 52.50 சதவீதமாகும்.
142 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவு, அதி அபாய டெங்கு வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை, மேல் மாகாணத்தில் நாளை முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
