ஈரான் தேசிய கீதத்தை பாடமறுத்த வீராங்கனைகளுக்கு குடியுரிமை வழங்கியது ஆஸ்திரேலியா

மகளிர் ஆசியக் கோப்பை (AFC Women’s Asian Cup) தொடரின் போது போராட்டத்தில் ஈடுபட்டதற்காகத் தங்கள் சொந்த அரசாங்கத்தால் “தேசத்துரோகிகள்” என முத்திரை குத்தப்பட்ட ஈரான் வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு கால்பந்து வீராங்கனைகள் தற்போது ஆஸ்திரேலியக் குடியுரிமையைப் பெற்றுள்ளனர்.

ஈரானிய தேசியக் கீதத்தைப் பாட மறுத்ததன் மூலம் பாத்திமா பசந்தீதே (Fatemeh Pasandideh – 22) மற்றும் அதீபே ரம்சானிசாதே (Atefeh Ramezanisadeh – 34) ஆகிய இரு வீராங்கனைகளும் உலக அளவில் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றனர்.

இவர்கள் இருவருக்கும் கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் டோனி பார்க் (Tony Burke) மனிதநேய விசாக்களை வழங்கிய நிலையில், புதன்கிழமை பிரிஸ்பேனில் (Brisbane) நடைபெற்ற குடியுரிமை வழங்கும் விழாவில் இவர்கள் அதிகாரப்பூர்வமாக ஆஸ்திரேலியக் குடிமக்களாகச் சேர்க்கப்பட்டனர்.

குடியுரிமை சான்றிழைப் பெற்றுக் கொண்ட பாத்திமா பசந்தீதே தனது அறிக்கையில் தெரிவிக்கையில், “நேற்று என் வாழ்க்கையின் மகிழ்ச்சியான நாட்களில் ஒன்று. அதிகாரப்பூர்வமாக ஆஸ்திரேலியக் குடிமகளாக மாறியதில் நான் அளப்பரிய பெருமையும் நன்றியும் அடைகிறேன்” என்று கூறியுள்ளார்.

“நாங்கள் கடந்து வந்த அனைத்துப் போராட்டங்களுக்கும், எதிர்கொண்ட சவால்களுக்கும் பிறகு, இந்தத் தருணம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு மிக முக்கியமானது. இது வெறும் சான்றிதழ் மட்டுமல்ல; ஒரு புதிய தொடக்கம் மற்றும் நான் என் தாய்வீடு எனப் பெருமையுடன் அழைக்கும் ஒரு இடம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளையில், அதீபே ரம்சானிசாதே தனது குடியுரிமையைப் பெற்ற நாளை “மறக்க முடியாத நாள்” என்று விவரித்துள்ளார்.

“ஆஸ்திரேலியக் குடிமகளாக மாறியதில் நான் பெருமையும் ஆழ்ந்த நன்றியும் அடைகிறேன். எனது வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் கட்டியெழுப்ப ஆஸ்திரேலியா எனக்கு வாய்ப்பளித்துள்ளது. நான் இங்குச் சொந்தமாகச் சார்ந்திருக்கிறேன் என்ற உணர்வு எனக்கு முன்பை விட இப்போது அதிகமாக உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், “அதே நேரத்தில், எனது வேர்களும் ஈரான் பற்றிய நினைவுகளும் எப்போதும் என் அடையாளத்தின் ஒரு பகுதியாகவே இருக்கும்” என்று கூறிய ரம்சானிசாதே, ஒரு ஆஸ்திரேலியக் குடிமகளாகச் சமூகத்திற்கு நேர்மறையான பங்களிப்பை வழங்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

புதன்கிழமை குடியுரிமைச் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்ட பிறகு, இந்த இரு வீராங்கனைகளும் அமைச்சர் டோனி பார்க்குடன் இணைந்து புகைப்படங்களுக்கு மகிழ்ச்சியுடன் தோட்சியளித்தனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles