பாராளுமன்றம் இன்று கூடுகிறது! 21/4 தாக்குதல் குறித்த அறிக்கையும் சமர்ப்பிப்பு!!

பாராளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.

இதன்போது 21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என தெரியவருகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் குறித்த அறிக்கை முன்வைக்கப்பட்டது. 23,24 ஆம் திகதிகளிலும் சபை அமர்வுகள் நடைபெறவுள்ளன.

Related Articles

Latest Articles