வருடம் 300 நாட்கள் வேலை வழங்க முடியாது – தோட்டக் கம்பனிகள் திட்டவட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட்  சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கவதற்கு சம்பள நிர்ணயசபை ஊடாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதால், கூட்டு ஒப்பந்தத்திலிருந்து தமது சங்கம் வெளியேறுகின்றது என்று பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மேற்படி சம்மேளனத்தின் ஊடகப்பேச்சாளர் ரொஷான் ராஜதுரை கூறியதாவது.

” எமக்கு பாதகமான பல விடயங்கள் கூட்டு ஒப்பந்தத்தில் இருந்தபோதும் இதுவரையில் அந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் செயற்பட்டோம். ஆனால் இனி அதனை பின்பற்றியாகவேண்டிய கடப்பாடு இல்லை. கூட்டு ஒப்பந்தம் ஊடாக வருடாந்தம் 300 நாட்கள் வேலை வழங்கப்பட்டது. எதிர்காலத்தில் சம்பளம் வழங்கக்கூடிய தொகைக்கேற்பவே வேலை வழங்கப்படும். ” – என்றார்.

Related Articles

Latest Articles