பாராளுமன்றம் இன்று கூடுகிறது – நாளை முக்கிய விவாதம்!

நாடாளுமன்றம் இன்று (09) பிற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.

இதன்படி முற்பகல் 10  மணிமுதல்  11  மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்று இடம்பெறும்.

அதனை அடுத்து, கடந்த அமர்வில் ஒத்திவைக்கட்ட இரத்தினக்கல் மற்றும் ஆபரண சட்டம் தொடர்பான ஒழுங்குவிதியும் வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான 2 கட்டளைகள் தொடர்பான விவாதம் நடைபெறும்.  3.30 மணி முதல் 5.30 மணிவரை சபை ஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதம் இடம்பெறும்.

10 ஆம் திகதி புதன்கிழமை, பிரதமரிடம் கேள்வி கேட்பதற்கான அவகாசம் இம்முறை இல்லை. எனினும், முற்பகல் 10.00 மணி முதல் 11.00 மணி வரை உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனை அடுத்து, ஆளும் கட்சியினால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணையாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை விவாதத்துக்கு  எடுக்கப்படவுள்ளது.

11, 12 ஆம் திகதிகளில் சபை அமர்வுகள் இடம்பெறாது. அடுத்த சபை தொடரிலும் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைமீது விவாதம் இடம்பெறும். இவ்விவகாரம் தொடர்பில் 3 நாட்கள் விவாதம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles