சீனி இறக்குமதியால் 15.9 பில்லியன் இழப்பு – ஜே.வி.பி. உயர்நீதிமன்றில் மனு!

சீனி இறக்குமதியால் அரசுக்கு 15. 9 பில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது என சுட்டிக்காட்டி, அதனுடன் தொடர்புடையவர்கள்மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு கோரி ஜே.வி.பி.இன்று உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.
ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனித் ஹத்துனெத்தியால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவின் பிரதிவாதிகளாக நிதி அமைச்சரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஸ, நிதி அமைச்சின் செயலாளர் S.R.ஆட்டிகல, ஜனாதிபதி செயலாளர் P.B.ஜயசுந்தர உள்ளிட்ட 9 பேர் பெயரிடப்படுள்ளனர்.

Related Articles

Latest Articles