பங்களாதேஷ் செல்கிறார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச!

பிரதமர் மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் 19ஆம் திகதி பங்களாதேஷிற்கு விஜயம் செய்யவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பங்களாதேஷ் நாட்டின் அழைப்பை ஏற்று அங்கு செல்கின்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ச, இரண்டு நாட்கள் அங்கு தங்கியிருப்பார் எனவும் கூறப்படுகின்றது.

இந்த விஜயத்தின்போது அவர் பங்களாதேஷ் நாட்டின் அரச பிரமுகர்களை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவிக்கு வந்த பின்னர் மேற்கொள்ளும் இரண்டாவது வெளிநாட்டு உத்தியோகபூர்வ விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles