சிகரட்டை புகைப்பவர்களுக்கு தீங்கு ஏற்படும் என்று தெரிந்திருந்த போதிலும் அந்தப் பழக்கத்தை விட முடியாமல் அல்லது குறைக்க முடியாமல் பலர் திணறி வருகின்றனர்.
புகைத்தல் புற்றுநோயை உருவாக்கும் என்ற வாசகம் அனைத்து இடங்களிலும் பார்த்தும், கேட்டும் இருந்தபோதிலும் அந்த பழக்கம் பலரைக் கட்டிப்போட்டுள்ளது.
ஆனால் இனி தாராளமாக புகைக்கலாம் என்ற வகையில் இலங்கையில் புதிய வகை சிகரட் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆம் அதுதான் மூலிகை முறையில் தயாரிக்கப்பட்ட கறுவாப்பட்டை சிகரட்.
வாயில் பற்றவைத்தபடி “கறுவாப்பட்டை சிகரட்டை” அமைச்சர் விமல் வீரவங்ச இதனை அறிமுகப்படுத்தினார்.
லயன் ஹார்ட் நாமத்தின் கீழ் 100% கறுவாப்பட்டை பயன்படுத்தி இது தயாரிக்கப்படுகிறது.
கறுவாப்பட்டை ஏற்றுமதி மற்றும் உற்பத்தியில் உலகளாவிய ரீதியில் இலங்கை முதன்மையாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இனி உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் புகையிலை சிகரட்டிற்குப் பதிலாக கறுவாப்பட்டை சிகரட்டை புகைக்கலாம். குறைவற்ற செல்வமான நோய் அற்ற வாழ்விற்கு வழி ஏற்படுத்துவோம்.