ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரேரணைக்கு ஆதரவாக 22 நாடுகளும், எதிராக 11 நாடுகளும் வாக்களித்தன. இந்தியா, ஜப்பான் உட்பட 13 நாடுகள் நடுநிலை வகித்தன.
பிரிட்டன், ஜேர்மன், கனடா, மொண்டிநீக்ரோ, வட மெசிடோனியா மற்றும் மலாவி ஆகிய நாடுகள் இணைந்தே இலங்கை விவகாரம் தொடர்பில் புதிய பிரேரணையை முன்வைத்தன.
அதேவேளை, குறித்த பிரேரணையை இலங்கை நிராகரித்துள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 47 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.