அரச கூட்டணிக்குள் வெட்டு, குத்து தொடர்கிறது – சுதந்திரக்கட்சி கவலை!

அரச கூட்டணிக்குள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு பாராபட்சம் தொடர்கின்றது. அது இன்னும் குறையவே இல்லை என்று சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றிரவு அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

கூட்டம் முடிவடைந்த பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே தயாசிறி ஜயசேகர இவ்வாறு கூறினார்.

” இது நாம் உருவாக்கிய அரசு. அதனுடன் இணைந்து பயணிக்கவே விரும்புகின்றோம். தேர்தலிலும் கூட்டணியாகவே பயணிக்க உத்தேசித்துள்ளோம். எனினும், கட்சிக்கு அநீதி இழைக்கப்பட்டால் தொடர்ந்தும் மௌனம் காக்கமுடியாது. ” எனவும் அவர் கூறினார்.

Related Articles

Latest Articles