தலவாக்கலையில் விபத்து – இருவர் படுகாயம்!

தலவாக்கலை – நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை கூட்டுறவு சங்க கடைக்கு முன்னால் நேற்றிரவு (30)8.30 மணியளவில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் மோட்டார் சைக்கிள் சாரதி உட்பட பொது மகன் ஒருவன் கடும் காயங்களுக்கு உள்ளாகி விந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

தலவாக்கலையில் இருந்து லோகி தோட்டத்தைச் நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள், வீதியைக் கடக்க முற்பட்டவர் மீது மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது வீதியில் சென்றவரும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் காயமடைந்தனர்.

லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து இருவரும் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் குறித்த நபர் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து லோறியின் அடியில் போய் நின்றதாக சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

ஹட்டன் விசேட நிருபர் -கே. சுந்தரலிங்கம்

Related Articles

Latest Articles