பதுளையில் மற்றுமொரு விபத்து – பஸ் மோதியதில் பாதசாரி பலி!

பதுளையிலிருந்து மகியங்கனைக்கு சென்று கொண்டிருந்த இ.போ.ச. பஸ் பாதசாரியொருவரை மோதியதில், பாதசாரி அவ்விடத்திலேயே பலியானார்.

இச்சம்பவம், பதுளையை அண்மித்த கைலகொடை எரிபொருள் நிலையத்தின் அருகே நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

பண்டாரவளையைச் சேர்ந்த மொகிதீன் வாஹீட் காசிம் என்ற 67 வயது நிரம்பிய நபரே, பஸ் மோதியதில் மரணமானவராவார். இவர் பண்டாரவளையிலிருந்து முக்கிய அலுவல் காரணமாக கைலகொடைக்கு வந்து, பாதையைக் கடக்கும் போதே, இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்து குறித்து, பதுளைப் பொலிசார் ஸ்தல விசாரணைகளை மேற்கொண்டதுடன், பஸ் சாரதியான டி.எம். ஜயசிங்க என்ற 44 வயது நிரம்பிய நபரை கைது செய்தனர். அந்நபர் 09-04-2021ல் முற்பகல் பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது, நீதிபதி சமிந்த கருணாதாச, அந்நபரை எதிர்வரும் 12ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Related Articles

Latest Articles