தெமோதரைப் பகுதியின் சவ்தம் தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் எட்டுப் பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி, தெமோதரை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம், நேற்று மாலை சவ்தம் தமிழ் மகா வித்தியாலய முன்றலில் இடம்பெற்றுள்ளது.
நேற்று பாடசாலை விடுமுறை வழங்கும் தினமாகையினால், மாணவர்கள் வித்தியாலய முன்றலில் விளையாடிக் கொண்டிருந்தனர். இவ்வேளையில் வித்தியாலய கட்டிடத் தொகுதியில் இருந்து வந்த குளவிக்கூடு கலைந்து, மாணவர்களை கொற்றத் தொடங்கின.
ஆண்டு ஒன்றில் 2 மாணவர்கள், ஆண்டு இரண்டில் 2 மாணவர்கள், ஆண்டு ஏழில் நான்கு மாணவர்களாக 8 மாணவர்கள் குளவிக் கொற்றலுக்கிழக்காகியுள்ளனர்.
குளவிக் கொற்றுக்கு இலக்கான இம் மாணவர்கள் தெமோதரை பிரதேச அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.










