பசறை நகரில கடமையில் ஈடுபட்டு இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய நபரை எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை நீதவான் உத்தரவிட்டார்.
பசறை நகரில் பேருந்து தரிப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள அங்காடியில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அவ்விடத்திற்கு சென்று பாதசாரிகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என குறித்த நபருக்கு கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமுற்ற அந்நபர் கையில் வைத்திருந்த கூரிய ஆயுதத்தால் பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கியுள்ளார்.இதன்போது காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தரை அயலவர்கள் உதவியுடன் பசறை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சந்தேக நபரைஸபசறை பொலிஸார் கைது செய்து.
இந்நிலையில் பதுளை நீதிவான் முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். எதிர்வரும் 22 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
செய்தி – பசறை ராமு தனராஜா.
