” பொதுத்தேர்தல் முடிவடைந்த பின்னர் அமையும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் நானே அமைச்சர். இதில் எவ்வித மாற்றமும் இல்லை என்று பதுளை மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
கொஸ்லாந்த மீரியாகல தோட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
” கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது நான் செய்த சேவைகளை மக்கள் அறிவார்கள். அரசாங்கம் மாறியதும் ஒரு சில வேலைத்திட்டங்கள் நிறுத்தப்பட்டிருக்கலாம். அவை தற்காலிகமாகவே இடை நிறுத்தப்பட்டுள்ளன. மீண்டும் புதிய அரசாங்கம் அமையும். அதில் நானும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக அமருவேன்.விட்டுச்சென்ற வேலைகளை மீண்டும் தொடருவேன்.” – எனவும் கூறினார்.
தகவல் : நீலமேகம் பிரசாந்த்