சன்னங்களால் சனங்களை தின்ற ஈஸ்டர் களறியின் ஈராண்டு நினைவு!

இற்றைக்கு ஈராண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் – ஈஸ்டர் திருநாளன்று இலங்கைத் தீவில் பீறிட்டு தெறித்த இரத்தம் அதிர்ச்சியில் அனைவரையும் உறையவைத்தது.

கருத்தரித்திருந்த தாய்மார் முதல் கனவுகளை சுமந்த சிறார்கள்வரை 277 பேர் உடல்சிதறிப் பலியானார்கள். 477 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்களில் சிலர் உடல் அவயங்களை இழந்து, வலிகளை சுமந்தப்படி வாழ்வதை இன்றும் காணக்கூடியதாக இருக்கின்றது.

மரணத்தை வீழ்த்தி, பாவத்தை ஒழித்து, இருளை வெற்றிகொண்ட இயேசுநாதர் உயிர்த்தெழுந்த நாளில், தேவாலயங்களுக்குள் இரத்த ஆறு பெருக்கெடுத்த பெருந்துயர் சம்பவமானது இலங்கையை மட்டுமல்ல முழு உலகத்தையுமே உலுக்கியது.

தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக இன்று 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. 8.45 இற்கு செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேவாலயங்களில் விசேட ஆராதனைகளும் இடம்பெறவுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளும் உரிய வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களில் பலியானோர் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை.

1.புனித செபஸ்தியன் தேவாலயம், கட்டான

தாக்குதல் நேரம் – காலை 8.45

பலியானோர் – 115

காயமடைந்தவர்கள் – 183

2.அந்தோனியார் தேவாலயம் – கொச்சிக்கடை

தாக்குதல் நேரம் – காலை 8.45

பலியானோர் – 54

காயமடைந்தவர்கள் –  83

3.கிங்ஸ்பரி ஹோட்டல் – கொழும்பு

தாக்குதல் நேரம் – காலை 8.47

பலியானோர் – 10

காயமடைந்தவர்கள் – 19

4.சங்கரில்லா ஹோட்டல் – கொழும்பு

தாக்குதல் நேரம் – காலை 8.54

பலியானோர் – 35

காயமடைந்தவர்கள் – 34

5.சியோன் தேவாலயம் – மட்டக்களப்பு

தாக்குதல் நேரம் – காலை 9.10

பலியானோர் – 31

காயமடைந்தவர்கள் – 67

6.சினமன் கிராண்ட் ஹோட்டல் – கொழும்பு

தாக்குதல் நேரம் – காலை 9.12

பலியானோர் – 22

காயமடைந்தவர்கள் – 20

தெஹிவளை ஹோட்டல் மற்றும் மருதானையிலுள்ள வீடொன்றிலும் தற்கொலை தாக்குதல்கள் இடம்பெற்றன.

Related Articles

Latest Articles