மூவருக்கு கொரோனா – ஹப்புத்தளை இலங்கை வங்கிக் கிளை மூடப்பட்டது!

ஹப்புத்தளை – இலங்கை வங்கிக் கிளை அலுவலகம், தொடர்ந்து வரும் இரு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக, ஹப்புத்தளை பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர் சுப்ரமணியம் சுதர்ஷன் தெரிவித்தார்.

குறிப்பிட்ட வங்கிக்கிளையின் முகாமையாளர், காசாளர், உதவியாளர் ஆகிய மூன்று பேருக்கு கோவிட் 19 தொற்று உறுதியாகியிருப்பது, இன்று 21-04-2021ல் பகல் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக ககாகொல்லை கோவிட் 19 சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு மேற்படி வங்கிக் கிளையில் கடமையாற்றும் ஒன்பது பேருக்கு பி.சி. ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அப் பரிசோதனை அறிக்கை 21-04-2021ல் வெளியான போது, குறிப்பிட்ட மூவருக்கும் கோவிட் 19 தொற்று உறுதியாகியிருப்பது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, வங்கிக் கிளையில் கடமையாற்றுபவர்களின் குடும்பத்தினர்களான 22 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், குறிப்பிட்ட வங்கிக் கிளையும் இரு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளனவென்று, பொது சுகாதாரப் பரிசோதகர் சுப்பிரமணியம் சுதர்ஷன் தெரிவித்தார்.

எம். செல்வராஜா, பதுளை

Related Articles

Latest Articles