‘அரசியலில் இருந்து ஓய்வு பெறுங்கள்’ – ராதாவுக்கு இ.தொ.கா. இளைஞர் அணி அறிவுரை

வாய் சொல்லிலும் இளைஞர் யுவதிகளை தாக்கியும் அரசியல் செய்யும் வங்குரோத்து நிலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தள்ளப்பட்டுள்ள நிலைமை கவலைக்கிடமானது . வாய் சொல்லில் அரசியல் செய்யாது தனக்கு வாக்களித்த மக்களுக்கு களப்பணியில் தனது அரசியல் முதிர்ச்சியை காட்டவும்  – என்று  இ.தொ.கா இளைஞர் அணி பொதுச்செயலாளர் அர்ஜூன் ஜெயராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு,

” மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் அமரர் பெ.சந்திரசேகரனின் பிறந்த தினத்தையொட்டி அக்கட்சியின் இளைஞர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இளைஞர் மாநாடு நிகழ்வில் மலையகத்தின் இளைய தலைமுறை அரசியல்வாதிகளை விமர்சித்து மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராதாகிருஸ்ணன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் கண்டனத்துக்குரியது .

இக்கருத்துக்கள் கட்சி பேதமின்றி இன்றைய இளம் தலைமுறை அரசியல்வாதிகளை அடக்கி ஒடுக்கும் செயற்பாட்டிற்கு நிகராகவுள்ளது. அரசியல் முதிர்ச்சி கொண்ட ஒருவரால் இத்தகைய கருத்துக்கள் மற்றும் உறைபதங்கள் ஒரு இளைஞர் மாநாட்டில் பிரயோகிக்கப்பட்டமை ஏற்றுகொள்ளக்கூடிய விடையமல்ல .

பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஸ்ணன்  தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர் மாநாடு நிகழ்வை கூட அவரால் செவ்வனே ஒழுங்கமைத்துகொள்ள முடியாதிருந்தமை அன்றைய தினம் பெரும் விளம்பரத்துக்கு பின் இளைஞர் மாநாட்டு மேடைக்கு சிறப்பு பேச்சாளர்களாக அழைக்கப்பட்டிருந்த இரு பாராளுமன்ற உறுப்பினர்களினதும் வருகையின்மை உறுதிசெய்துள்ளது .

மேலும் ம.ம.மு ஸ்தாபக தலைவர் அமரர் பெ.சந்திரசேகரன் அவர்களின் ஜனன தினத்தையொட்டி இளைஞர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதும் அது அவரின் எத்தனையாவது ஜனன தினம் என்று கூட தெரியாது பிழையாக நினைவு கூர்ந்ததுக்கு காரணம் அவரின் வயது காரணமாக வந்த மறதியா என்று நினைக்க தோன்றுகிறது. அது அவ்வாராயின் அவர் அரசியலில் இருந்து உடன் ஓய்வு பெற்று இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்குவது சாலச்சிறந்தது.

மேலும் “வெத்து வேட்டு” யாரென்ற கேள்விக்கான பதிலை மக்கள் வெகுவிரைவில் வழங்குவர்.

வாய் சொல்லிலும் இளைஞர் யுவதிகளை தாக்கியும் அரசியல் செய்யும் வங்குரோத்து நிலைக்கு பா உ ராதாகிருஷ்ணன் தள்ளப்பட்டுள்ள நிலைமை கவலைக்கிடமானது .
வாய் சொல்லில் அரசியல் செய்யாது தனக்கு வாக்களித்த மக்களுக்கு களப்பணியில் தனது அரசியல் முதிர்ச்சியை காட்டவும் .

அத்தோடு தமிழ் முற்போக்கு கூட்டணியில் இருந்து மலையக மக்கள் முன்னணி ஓரங்கட்டபட்டுள்ள நிலையில் மீண்டும் மீண்டும் தமிழ் முற்போக்கு கூட்டணியில் தஞ்சம் புகுந்துக்கொள்ளவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் அவர்களை கட்சியை விட்டு நீக்கியபோதும் கூட தற்போது தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதான தலைவர்களிடம் கரிசணை பெறவேண்டும் என  ஆளும் கட்சியையும் மலையகத்தின் இளம் அரசியல்வாதிகளை விமர்சிப்பதிலுமே பா உ ராதாகிருஸ்ணின் அவர்களின் அரசியல் முதிர்ச்சி புலப்படுகின்றது .” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles