வாய் சொல்லிலும் இளைஞர் யுவதிகளை தாக்கியும் அரசியல் செய்யும் வங்குரோத்து நிலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தள்ளப்பட்டுள்ள நிலைமை கவலைக்கிடமானது . வாய் சொல்லில் அரசியல் செய்யாது தனக்கு வாக்களித்த மக்களுக்கு களப்பணியில் தனது அரசியல் முதிர்ச்சியை காட்டவும் – என்று இ.தொ.கா இளைஞர் அணி பொதுச்செயலாளர் அர்ஜூன் ஜெயராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு,
” மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் அமரர் பெ.சந்திரசேகரனின் பிறந்த தினத்தையொட்டி அக்கட்சியின் இளைஞர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இளைஞர் மாநாடு நிகழ்வில் மலையகத்தின் இளைய தலைமுறை அரசியல்வாதிகளை விமர்சித்து மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராதாகிருஸ்ணன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் கண்டனத்துக்குரியது .
இக்கருத்துக்கள் கட்சி பேதமின்றி இன்றைய இளம் தலைமுறை அரசியல்வாதிகளை அடக்கி ஒடுக்கும் செயற்பாட்டிற்கு நிகராகவுள்ளது. அரசியல் முதிர்ச்சி கொண்ட ஒருவரால் இத்தகைய கருத்துக்கள் மற்றும் உறைபதங்கள் ஒரு இளைஞர் மாநாட்டில் பிரயோகிக்கப்பட்டமை ஏற்றுகொள்ளக்கூடிய விடையமல்ல .
பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஸ்ணன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர் மாநாடு நிகழ்வை கூட அவரால் செவ்வனே ஒழுங்கமைத்துகொள்ள முடியாதிருந்தமை அன்றைய தினம் பெரும் விளம்பரத்துக்கு பின் இளைஞர் மாநாட்டு மேடைக்கு சிறப்பு பேச்சாளர்களாக அழைக்கப்பட்டிருந்த இரு பாராளுமன்ற உறுப்பினர்களினதும் வருகையின்மை உறுதிசெய்துள்ளது .
மேலும் ம.ம.மு ஸ்தாபக தலைவர் அமரர் பெ.சந்திரசேகரன் அவர்களின் ஜனன தினத்தையொட்டி இளைஞர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதும் அது அவரின் எத்தனையாவது ஜனன தினம் என்று கூட தெரியாது பிழையாக நினைவு கூர்ந்ததுக்கு காரணம் அவரின் வயது காரணமாக வந்த மறதியா என்று நினைக்க தோன்றுகிறது. அது அவ்வாராயின் அவர் அரசியலில் இருந்து உடன் ஓய்வு பெற்று இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்குவது சாலச்சிறந்தது.
மேலும் “வெத்து வேட்டு” யாரென்ற கேள்விக்கான பதிலை மக்கள் வெகுவிரைவில் வழங்குவர்.
வாய் சொல்லிலும் இளைஞர் யுவதிகளை தாக்கியும் அரசியல் செய்யும் வங்குரோத்து நிலைக்கு பா உ ராதாகிருஷ்ணன் தள்ளப்பட்டுள்ள நிலைமை கவலைக்கிடமானது .
வாய் சொல்லில் அரசியல் செய்யாது தனக்கு வாக்களித்த மக்களுக்கு களப்பணியில் தனது அரசியல் முதிர்ச்சியை காட்டவும் .
அத்தோடு தமிழ் முற்போக்கு கூட்டணியில் இருந்து மலையக மக்கள் முன்னணி ஓரங்கட்டபட்டுள்ள நிலையில் மீண்டும் மீண்டும் தமிழ் முற்போக்கு கூட்டணியில் தஞ்சம் புகுந்துக்கொள்ளவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் அவர்களை கட்சியை விட்டு நீக்கியபோதும் கூட தற்போது தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதான தலைவர்களிடம் கரிசணை பெறவேண்டும் என ஆளும் கட்சியையும் மலையகத்தின் இளம் அரசியல்வாதிகளை விமர்சிப்பதிலுமே பா உ ராதாகிருஸ்ணின் அவர்களின் அரசியல் முதிர்ச்சி புலப்படுகின்றது .” – என்றார்.
