நாட்டில் மேலும் 714 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி இன்று மாத்திரம் ஆயிரத்து 636 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 146 ஆக அதிகரித்துள்ளது. 11 ஆயிரத்து 504 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். 95 ஆயிரத்து 975 பேர் குணமடைந்துள்ளனர்.
