நுவரெலியா மாவட்டத்தில் நேற்று 72 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பொகவந்தலாவை உட்பட 12 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் இருந்தே மேற்படி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவும், தொற்றாளர்களின் எண்ணிக்கையும் வருமாறு,
பொகவந்தலாவ – 02
கினிகத்தேனை – 02
ஹட்டன் – 04
கந்தபளை – 19
மஸ்கெலியா – 06
நோட்டன் பிரிட்ஜ் – 01
நோர்வூட் – 02
நுவரெலியா – 33
ராகலை – 01
வட்டவளை – 01
வலப்பனை – 01
அதேவேளை, பதுளை மாவட்டத்தில் 47 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 89 பேருக்கும் நேற்று வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.










