பதுளை, ஹாலிஎல பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி பெண் தோட்டத் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹாலிஎல – ரொசட் தோட்டத்தை சேர்ந்த இவர், தேயிலை தோட்டத்தில் கொழுந்து கொய்துகொண்டிருக்கையிலேயே நேற்று இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.
அதன்பின்னர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளார்.
71 வயதான இப்பெண் ஏற்கனவே ஓய்வு பெற்றிருந்தாலும், வாழ்வாதாரத்தை முன்னெடுப்பதற்காக தோட்டத்தில் ‘கைக்காசுக்கு’ (பதிவுசெய்யப்படாத தொழிலாளி) வேலை செய்துள்ளார்.
