” பயணக்கட்டுப்பாட்டால் எவ்வித பயனும் இல்லை எனக் கூறமுடியாது. இன்னும் ஒரிரு வாரங்களில் அதன் பயனை உயரக்கூடியதாக இருக்கும்.” – என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாட்டில் பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு முன்னர் நாளாந்தம் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இன்று ஒரு தொகை இருந்தால் அதைவிடவும் அதிகமானதொரு தொகையே நாளை இனங்காணப்பட்டது. எனினும், பயணக்கட்டுப்பாடுகளின் பின்னர் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.
கூடுதலான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டாலும் எண்ணிக்கை என்பது சமமட்டத்தில் உள்ளது. எனவே, பயனத்தடையால் பயன் இல்லை எனக்கூறமுடியாது. இன்னும் இரு வாரங்களில் அதன் பயனை அறியக்கூடியதாக இருக்கும்.
அத்துடன், பயணத்தடையை கட்டம், கட்டமாகவே தளர்த்த வேண்டும். பயணக்கட்டுப்பாடுகளை முழுமையாக மறந்து ஒன்றுகூடும் வகையில் மக்கள் செயற்பட்டால் மீண்டும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்ககூடும். எனவே, சுகாதார நடைமுறைகள் முழுமையாக பின்பற்றப்படவேண்டும்.” – என்றார்.










