‘வெள்ளம்’ – கர்ப்பிணி மனைவியை தூக்கிக்கொண்டு 11 கி.மீ. நடந்த கணவன்

நாட்டில் கடந்தவாரம் கடும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலை நிலவியது. பல இடங்கள், வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின. காலி மாவட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

காலி, இனிதும பகுதியில் உள்ள கர்ப்பிணி பெண்ணொருவருக்கு சிகிச்சைக்காக வைத்தியசாலை செல்லவேண்டியிருந்தது. வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் அம்புலன்ஸ் வண்டிகூட வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் தனது கர்ப்பிணி மனைவியை தூக்கிக்கொண்டு 11 கி.மீ. நடந்தே சென்றுள்ளார் கணவன் குமார.

 

 

Related Articles

Latest Articles