பிலிப்பைன்ஸ் விமான விபத்து – இதுவரை 17 பேரின் சடலங்கள் மீட்பு!

பிலிப்பைன்ஸ் நாட்டில் 92 பேருடன் பயணித்த இராணுவ விமானம் கீழே விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. இதுவரை 17 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

பிலிப்பைன்ஸின், சுலு எனும் இடத்தில் தரையிறங்க முற்பட்ட போது விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.

தொழில்நுட்பகோளாறே விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகின்றது. 40 பயணிகள் காயங்களுடன் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles