எல்லா வழிகளிலும் இந்த அரசு ‘பெயில்’ – ஐ.தே.க. குற்றச்சாட்டு

“ எல்லா வழிகளிலும் தோல்விகண்டுள்ள இந்த அரசு, தற்போது அடக்குமுறை எனும் ஆயுதத்தை கையிலேந்தி சட்டத்துக்கு புறம்பாக பயணிக்க முற்படுகின்றது. இதற்கு ஒருபோதும் இடமளிக்கமுடியாது.” –  என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார குற்றஞ்சாட்டினார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு பலவந்தமாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

“ இந்த அரசு ‘பெயில்’ என ஆரம்பத்திலேயே சுட்டிக்காட்டினோம். தற்போது எல்லாவழிகளிலும் ‘பெயில்’ என்பது உறுதியாகியுள்ளது. அதனால்தான் அடக்குமுறை வழி கையாளப்படுகின்றது. அதுமட்டுமல்ல சட்டத்தையும் கையில் எடுத்து செயற்படுகின்றது. இதன் ஓர் அங்கமாகவே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு, பலவந்தமாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.” – என்றும் அவர் கூறினார்.

Related Articles

Latest Articles