‘இ.தொ.கா. உறுப்பினர்கள்கூட வெற்றிபெற வேண்டும் என நினைப்பவன் நான்’

கொழும்பு வாழ் தமிழர்கள் மனோ கணேசனுக்கு வாக்களிக்க வேண்டாம். விமல் வீரவன்ஸவுக்கு வாக்களியுங்கள் எனத் தேர்தல் பரப்புரை செய்யும் தமிழர்கள், தமிழ் இனத்தின் துரோகிகளாகக் கருதப்படுவார்கள். மலையக மக்கள் தொடர்பில் ‘அப்பா கனவு கண்டார்’ என்று குறிப்பிடுகின்றார்கள். குறுகிய காலத்தில் கனவுகளை முடிந்தவரை நாங்கள் நிறைவேற்றினோம். மலையகத்தில் நாங்கள் செய்த சேவைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க மக்கள் மீண்டும் அதிகாரத்தை வழங்க வேண்டும்.

– இவ்வாறு முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெயிலா மாவட்ட வேட்பாளருமான பழனி திகாம் பரம் தெரிவித்தார்.

கொழும்பு வாழ் மலையக இளைஞர்களுடனான சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் மலையகத்துக்கு எவ்வளவு முக்கியமோ அதுபோலவே, கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கும் முக்கியமான தேர்தல்.

இந்தநிலையில் கொழும்பு வாழ் தமிழர்கள் மனோ கணேசனுக்கு வாக்களிக்கக் கூடாது எனவும், அமைச் சர் விமல் வீரவன்ஸவுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் கூறும் தமிழர்கள் தமிழினத்தின் துரோகிகளாகக் கருதப்
படுவார்கள்.

அப்பா கனவு கண்டார் என சிலர் கூறுகிறார்கள். ஆனால், மலையகம் தொடர்பில் கனவு கண்டவர்கள் நாங்கள். நாம் கண்ட கனவே இன்று நிறைவேறியுள்ளது. .தமிழ் முற்போக்குக் கூட்டணி யின் தலைவர் மனோ கணேசன் சிறந்த தலைவர். பொதுத்தேர்தலில் வெற்றி பெறுவது அல்லது தோல்வியடைவது என்பது எனக்கு ஒரு பிரச்சினை இல்லை.

நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டும். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளர்கள் கூட வெற்றிபெற வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். ஆனால், அவர்கள் நான் தோல்வியடைய வேண்டும் என்றே நினைக்கிறார்கள்.

நான் அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் எனது உறவினர்கள் எவருக் கும் எனது அமைச்சில் தொழில் வழங்கவில்லை. எனது மகனுக்கான பெற்றோர் கூட்டங்களில்கூட இதுவரை யில் கலந்துகொண்டதில்லை. மலையகத்தில் நான் இதுவரையில் செய்த சேவையைத் தொடரவே அதிகாரத்தைக்கேட்கின்றேன் – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles