பலம்வாய்ந்த இ.தொ.கா. இருக்கும்போது இன்னுமொரு புதிய தொழிற்சங்கம் தேவையில்லை என்கிறார் ரூபன் பெருமாள்

மலையகத்தில் பலம் வாய்ந்த தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இருக்கையில் புதிய தொழிற்சங்கம் ஒன்றுக்கான தேவை இல்லை என இ.தொ.கவின் உப செயலாளர் ரூபன் பெருமாள் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட துறையின் பலம் வாய்ந்த தொழிற்சங்க கூட்டமைப்பு விரைவில் உருவாகிறது என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இன்று ஊடக சந்திப்பு ஒன்றில் கூறியிருந்தார்.

அவரின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே ரூபன் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், மலையக மக்களின் தொழிற்சங்க சக்தியாகவும் அவர்களின் பாதுகாவலனாகவும் இ.தொ.கா இருக்கும் போது புதிய தொழிற்சங்கனம் ஒன்றுக்கான தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஜீவன் தொண்டமான் மற்றும் செந்தில் தொண்டமான் ஆகியோரின் தலைமையில் பலம் பொருந்திய தொழிற்சங்கம் மலையகத்தில் செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மலையக மக்கள் எந்தவித புதிய தொழிற்சங்களுக்கும் இடம்கொடுக்க மாட்டார்கள் எனவும் இவ்வாறான நிலையில் புதிய கூட்டணியை அமைப்பதோ அல்லது தொழிற்சங்கத்தை உருவாக்குவதென்பதோ சாத்தியமாகாது என அவர் தெரிவித்துள்ளார்.

இழிப்பறியில் இருந்த 1000 சம்பளம் உள்ளிட்ட சலுகைகளை அரசாங்கத்தின் மூலம் பெற்றுக் கொடுத்த இ.தொ.கா தொடர்ந்தும் மக்களுக்காக சேவையாற்ற கடமைப்பட்டுள்ளது எனவம் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே மலையக மக்களை ஏமாற்றி அவர்களை வஞ்சிக்கும் எந்த தொழிற்சங்கங்களுக்கும் இனி மேல் பெருந்தோட்ட மக்கள் இடமளிக்கமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே புதிய தொழிற்சங்கங்கத்தை உருவாக்கி தொழிலாளர்களை சேர்த்து விடலாம் என மனோ கணேசன் உள்ளிட்ட உறுப்பினர்களின் நினைப்பது ஒருபோதும் சாத்தியமாகாது எனவும் ரூபன் பெருமாள் தெரிவித்துள்ளார்.

புதிய தொழிற்சங்கம் என கூறி வேகாத பருப்பை மலையகத்தில் வேக வைக்க முற்படுவது கேலியான விடயம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles