செந்திலின் வெற்றிக்காக களத்தில் ஜனாதிபதி

பதுளை மாவட்ட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் செந்தில் தொண்டமானை ஆதரித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று பிரசாரப் பணிகளில் ஈடுபட்டார்.

பதுளைக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி, செந்தில் தொண்டமானுடன் மக்களைச் சந்தித்து, அவர்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்ததுடன், செந்தில் தொண்டமானுக்கு ஆதரவாக பிரசாரத்திலும் ஈடுபட்டிருந்தார்.

இதன்போது நடு வீதியில் பெருந்திரளான மக்கள் குழுமியிருக்கையில், ஜனாதிபதி வீதியில் இறங்கி மக்களைச் சந்தித்தார்.

அங்கு ஊவா மாகாண முதலமைச்சரின் பிரசாரக் கூட்டமொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிலையில், அதனைவிட மும்மடங்கு மக்கள் செந்தில் தொண்டமானின் கூடியிருந்தனர்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி ஜனாதிபதி முன்னெடுத்துவரும் சூறாவளி சுற்றுப் பயணத்திற்கமைய இன்று பதுளை மாவட்டத்தில் ஜனாதிபதி பிரசாரங்களை முன்னெடுத்தார்.

Related Articles

Latest Articles