கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தக்கூடியது என கேகாலை பகுதியிலுள்ள தம்பிக்க பண்டாரவால் கண்டுபிடிக்கப்பட்ட ‘தம்மிக்க பாணி’ தற்போது குழி தோண்டி புதைக்கப்படுகின்றது. இது தொடர்பான காணொலியும் சமூகவலைத்தளங்கில் வைரலாகியுள்ளது.
கொரோனா 2ஆவது அலையின்போது மேற்படி பாணியை வைத்து பெரும் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது.
எனினும், இப்பாணியை மேலதிக உணவாககூட பயன்படுத்த முடியாது என சுகாதார தரப்பினர் ஆய்வுமூலம் உறுதிப்படுத்தினர். இவ்வாறானதொரு பின்புலத்திலேயே தற்போது பாணி புதைக்கப்பட்டுவருகின்றது.










