‘நாட்டை முடக்கி ஆட்சியை கவிழ்ப்பதே எதிரணியின் இலக்கு’ – மொட்டு கட்சி

“ கொரோனா வைரஸ் என்ற சர்வதேச தொற்று நெருக்கடி நிலைமைக்கு மத்தியிலும் நாட்டில் ஸ்தீரமற்ற தன்மையை ஏற்படுத்தி, ஆட்சியைக் கவிழ்ப்பதை இலக்காகக்கொண்டே எதிர்க்கட்சிகள் செயற்படுகின்றன. “ – என்று அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன குற்றஞ்சாட்டினார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்றி கொரோனாவுக்கு மத்தியிலும் வாழ நேரும் நிலைமையே உருவாகும். எனவே, வைரஸ் தொற்றை ஒழிக்கும் செயலை முன்னெடுக்கும் அதேவேளை பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்தையும் ஆரம்பிக்க வேண்டும். இதன்படி சுகாதார நடைமுறைகளுக்கமைய சுற்றுலாத்துறையை செயற்படுத்த வேண்டும். கைத்தொழில் துறைகள் மற்றும் தொழிற்சாலைகள் செற்பட வேண்டும்.

நாடு முடக்கப்பட்டிருந்தாலும் அரச ஊழியர்களின் சம்பளம் துளியளவும் குறைக்கப்படவில்லை. நெருக்கடி நிலைமையிலும் முழு சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால் ‘லொக்டவுனால்’ நாளாந்த வருமானத்தை நம்பி வாழ்பவர்களுக்குதான் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அவர்கள் தொடர்பிலும் சிந்தித்து நாம் விழிப்பாக செயற்பட வேண்டும்.

நாட்டை முடக்குமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. நாடும் முடக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று என்ன சொல்கின்றனர், பகுதியளவே நாடு மூடப்பட்டுள்ளது, எனவே, முழுமையாக முடக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றனர். தொழிற்சாலைகளை மூடுமாறு அழுத்தம் கொடுக்கின்றனர்.

தொழிற்சாலைகள் இயங்காது, ஏற்றுமதி வீழ்ச்சியடைந்தால் இந்நாட்டுக்கான அந்திய செலாவணி கிடைக்காது. நாட்டுக்கு வருமானம் இல்லாமல் போனால் டொலர் இருக்காது. அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் எரிபொருள் மற்றும் மருந்து வகைகளை வாங்க முடியாது.

எனவே, இவ்வாறானதொரு நிலைமையை ஏற்படுத்தி, அரசை வீட்டுக்கு அனுப்பும் குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரலே தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையிலும் முன்னெடுக்கப்படுகின்றது. நாடு ஸ்தீரமற்ற நிலையில் இருக்கவேண்டும் என்பதைத்தான் இத்தகையவர்கள் விரும்புகின்றனர். கர்ம வினை என்பது இவர்களை சும்மா விடாது. அடுத்த பிறவியிலாவது அவர்களுக்கு தகுந்த பாடம் கிடைக்கும்” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles