‘அமைச்சரவை தீர்வை ஏற்கமுடியாது – போராட்டம் தொடரும்’ – ஆசிரியர் சங்கங்கள் அறிவிப்பு

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட தமது கோரிக்கைகள் தொடர்பிலான அமைச்சரவையின் தீர்மானங்களை நிராகரிக்கின்றோம். உரிய தீர்வு கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் என்று ஆசிரியர் – அதிபர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் இன்று அறிவித்தது.

ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்க்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது எனவும், செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்காக 5,000 ரூபா கொடுப்பனவு பெற்றுக்கொடுக்கப்படும் எனவும், சம்பள அதிகரிப்பை வரவு செலவுத்திட்டத்தினூடாக கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் கல்வி அமைச்சர் இன்று தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறியவை வருமாறு,

” எம்மால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை அமைச்சரவை உப குழு ஏற்கவில்லை. உரிய வகையில் தீர்வு திட்டம் முன்னெடுக்கப்படவில்லை. அமைச்சரவையால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்வை ஏற்கமுடியாது. சுபோதினி அறிக்கையின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட வேண்டும். ஒரே தடவையில் தீர்வு அவசியம்.

ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாட எதிர்ப்பார்க்கின்றோம். எனவே, சந்திப்புக்கான நேரத்தை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றார்.

Related Articles

Latest Articles