இலங்கையில் தேயிலை செய்கைத் துறையில் விவசாய நடைமுறைகள் பற்றிய தவறான கருத்துகளுக்கு தீர்வு காணுதல்

நாட்டின் விவசாயகத் துறைக்கு அத்தியாவசிய உரங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக அரசாங்கம் அண்மையில் எடுத்த நடவடிக்கைகள், தேயிலை, ரப்பர் மற்றும் பிராந்திய தோட்ட நிறுவனங்கள் உட்பட பிற தோட்டப் பயிர் செய்கைத் துறையில் உள்ள அனைத்து பங்குதாரர்களாலும் பாராட்டப்பட்டது.

குறிப்பாக தேயிலைத் தொழில் பல சவால்களை எதிர்கொள்ளும் நேரத்தில் இது மிகவும் சரியான நேரத்தில் உதவியது.

எனவே, அரசாங்கத்தின் இந்த செயல்முறை இப்பகுதியில் உள்ள அனைத்து தோட்ட நிறுவனங்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டது.

எவ்வாறாயினும், உரங்கள் பற்றிய அண்மைய கால விவாதங்களில், சில விமர்சகர்கள் மற்றும் பொது பிரதிநிதிகள் இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதி மற்றும் அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் வழிகளில் ஒன்றான உலகம் முழுவதிலும் வரவேற்பைப் பெற்ற ‘சிலோன் டீ’ உற்பத்தி செய்யும் தேயிலை தோட்டங்களின் விவசாய நடைமுறைகளை தவறாக புரிந்து கொள்ளுதலை ஏற்படுத்தியுள்ளன.

எனவே இது போன்ற தவறான கருத்துகளையும் தவறான புரிந்துகொள்ளுதல்களையும் சரிசெய்து தேயிலைத் தோட்டங்களில் உரங்கள் மற்றும் விவசாயக செய்கைகளை பிராந்திய தோட்ட நிறுவனங்களின் பயன்பாட்டை தெளிவுபடுத்த முயல்கிறது.

இலங்கையின் தேயிலை உற்பத்தியில் 75%க்கும் அதிகமானவை சிறுதொழில் தேயிலைத் துறையால் உற்பத்தி செய்யப்படுகின்றன, இது பிராந்திய தோட்ட நிறுவனங்களுக்கு சொந்தமானவை அல்ல. RPCயின் கீழுள்ள தோட்டங்களின் செய்கை நடைமுறைகள் மட்டுமே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.

ஒருங்கிணைந்த விவசாயம் என்பது பாரம்பரிய மற்றும் நவீன விவசாய முறைகளின் கலவையாகும், இது வெறும் வர்த்தகப் பிரச்சினைகளுக்கு அப்பாற்பட்டது மற்றும் நீண்டகால நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக சமூக மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளில் சரியான கவனம் செலுத்துகிறது.

இலங்கையில் உள்ள தேயிலைத் தோட்டங்கள் 150 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச தரத்திற்கு ஏற்ப உயர்தர தேயிலையை உற்பத்தி செய்து வருகின்றன. ஒருங்கிணைந்த விவசாய முறைகள் இல்லாமல் அதனை மேற்கொள்ள முடியாது.

RPC தோட்டங்களில் களைகளைக் கட்டுப்படுத்த செயற்கை இரசாயன நாசினிகளை நம்பாமல் பல்வேறு உயிரியல் உத்திகளைப் பயன்படுத்துவது (தீங்கு விளைவிக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த மாற்று வழிகளைப் பயன்படுத்துவது) ஒருங்கிணைந்த விவசாய முறைகள் நடைமுறையில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. இதேபோல், பாரம்பரியப் பழக்கவழக்கங்கள் மற்றும் கரிம உரப் பொருட்களின் பயன்பாடு மற்றும் பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் பரிந்துரைக்கப்பட்ட விவசாய இரசாயனங்கள் தாவர பாதுகாப்பு போன்ற அனைத்து செய்கை நடவடிக்கைகளிலும் நடைமுறையில் உள்ளன.

விவசாய இரசாயனப் பொருட்கள் உற்பத்திச் செலவின் (COP) ஒரு குறிப்பிடத்தக்க அங்கமாகும் மற்றும் அவற்றின் அதிகரித்த பயன்பாடு உற்பத்திச் செலவை அதிகரிக்கிறது. இது RPC எதிர்பார்ப்பது அல்ல, அந்தக் குற்றச்சாட்டுக்கு எந்த அடிப்படையும் இல்லை.

இந்த கட்டுக்கதை உண்மைக்கு புறம்பானது, ஏனெனில் இலங்கை தேயிலைத் தொழில் உலகின் மிகவும் சுற்றுச்சூழல் நட்பு மற்றும் சர்வதேச அளவில் சான்றளிக்கப்பட்ட ஒன்றாகும். RPC தோட்டங்கள் Rainforest Alliance, Forest Stewardship Council, Fairtrade International, Good Agricultural Practices போன்ற பல சர்வதேச அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களால் மேம்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், 1975ஆம் ஆண்டு முதல், இலங்கை தேயிலை ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பால் (FAO) உலகின் தூய்மையான தேயிலை என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

தேயிலை விவசாயத்தில் செய்கைக்காக பயன்படுத்தப்படும் பொருட்களில் அதிகப்படியான பயன்பாடு பற்றிய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் (TRI) போன்ற உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்துள்ளது. கடுமையான ஆராய்ச்சி மற்றும் ஒப்புதல் செயல்முறைக்குப் பிறகுதான் தேயிலைச் செய்கைக்கு விவசாய உரங்களைப் பயன்படுத்த TRI அனுமதித்தது. உற்பத்தியாளர் மற்றும் தேசிய, சர்வதேச மற்றும் கொள்வனவாளர்களின் தரத்திற்கு ஏற்ப விவசாய செய்கைப் பொருட்களின் பயன்பாட்டில் பல பாதுகாப்புக்கான சிறந்த உத்திகளை RPC நெருக்கமாக பின்பற்றுகிறது.

கரிம தேயிலைக்கு உலகளவில் 1%க்கும் குறைவான சந்தை வாய்ப்புக்களே உள்ளது. இலங்கை தேயிலைத் தொழில் பல்வேறு கோணங்களில் கடுமையான சவால்களை எதிர்கொண்டிருக்கும் நேரத்தில், இந்த சிறிய சந்தைக்கு மாறுவது எந்த வகையிலும் சிறந்ததல்ல. 2020 மொத்த ஏற்றுமதி வருவாயின் அடிப்படையில், 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டிய ஒரு தொழிலை ஒரு சிறிய சந்தையால் தக்கவைக்க முடியாது.

RPC மொத்தம் 105,000 பேருக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கியுள்ளது மற்றும் தோட்டத் துறையில் சுமார் ஒரு மில்லியன் மக்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. மக்கள் தொகையில் சுமார் 5% பயனடையும் இவ்வளவு சிறிய சந்தைக்கு செல்வதன் மூலம் தோட்ட சமூகத்தின் வாழ்க்கையை வைத்து RPCக்கள் பந்தயம் கட்டுவது சாத்தியமில்லை.

மேலும், நடைமுறையில் கரிம விவசாய செய்கைக்கு மாறுவது சவாலானது. ஒரு கிலோகிராம் ஆர்கானிக் தேயிலையின் உற்பத்தி செலவு 1900 ரூபா. இது ஒரு கிலோகிராம் வழக்கமான தேயிலையின் உற்பத்தி செலவை விட மூன்று மடங்கு அதிகமாகும்.
100% இயற்கை முறையில் விவசாயம் செய்தால், நோய்கள் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது. 1869ஆம் ஆண்டில் கோப்பி செய்கையை பாதித்த கோப்பி இலை துரு பூஞ்சை காரணமாக கணிசமான எண்ணிக்கையிலான கோபி தோட்டங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக பல இலங்கையர்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள்.

அப்போது விவசாயத்தில் இரசாயனப் பொருட்கள் பயன்படுத்தப்படாததால் பூஞ்சை நோய்க்கு எந்த சிகிச்சையும் இருக்கவில்லை, எனவே முழு தொழிற்துறையும் அழிவடைந்தது. தற்போது விவசாயம் மற்றும் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தால் இத்தகைய சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் ஆனால் விவசாய செய்கைப் பொருட்களை எந்த விதத்திலும் பயன்படுத்தாமல் அவற்றைத் தீர்ப்பது மிகவும் கடினம்.

உதாரணமாக, அதிக ஈரப்பதம் உள்ள தேயிலைத் தோட்டங்களில், பூஞ்சைக் கொல்லிகளைப் பயன்படுத்துவது அவசியம். இல்லையெனில், இந்த பூஞ்சை நோய்களால் பயிரின் 20% முதல் 30% வரை மிகக் குறுகிய காலத்தில் இழக்க நேரிடும்.

இறுதியாக, பல்வேறு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், RPCன் கீழ் உள்ள தோட்டங்களில் விவசாய இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துவது தொடர்பாக அனைத்து தேசிய மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்பதை வலியுறுத்த வேண்டும். இல்லையெனில், சிலோன் டீ பிராண்டின் தரத்திற்கான சர்வதேச அங்கீகாரம் வலுவாக இருக்காது.

Related Articles

Latest Articles